Saturday, 11th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், குருசாமிபாளையம் அடுத்த S.நாட்டாமங்கலத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ அங்காளம்மன் திருக்கோயில் ஐப்பசி மாதம் பௌர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு அன்னாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக ஸ்ரீ அங்காளம்மன் சாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.
பிறகு மஹா தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு மிக்க இப்பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருள் பெற்றனர்.
தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது